01. கல்வித்தத்துவத்தைக் கற்பதனால் ஆசிரியருக்குக் கிடைக்கும் நன்மைகள் இரண்டு எழுதுக?
- கலைத்திட்ட உள்ளடக்கத்தை தீர்மானிக்க
- கற்றல் கற்பித்தல் மறைகளை தீர்மானிக்க
- மாணவர்களது ஒழுக்க, மனப்பாங்கு விருத்தியை மேற்கொள்ள
- கல்வி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிக்க
02. 'மாணவரின் இட்சகர்' என அழைக்கப்படுகின்ற ரூசோவின் கல்விததத்துவங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற பிள்ளை மையக் கருத்துக்கள் இரண்டைக் குறிப்பிடுக.
- மாணவர் மையக்கல்வி அறிமுகம்.
- செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல்.
- மாணவர் சுதந்திரத்தினை ஊக்குவித்தல்.
- கல்விக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பினை அதிகரித்தல்.
03. முறைசார் பாடசாலைக் கட்டமைப்புக்கும் கல்விக்கும் எதிராக தற்காலத்தில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் இரண்டு எழுதுக.
- பரீட்சை மையம்
- சுயமான கற்றலுக்கு தடையாகவிருத்தல்.
- தொழில்சார் கல்விக்கு வாய்ப்பின்மை
- பழமையான கற்பித்தல் முறைகளை பின்பற்றல்.
04. இலங்கையில் செயற்படுகின்ற முறைசாராக் கல்வி நிறுவனங்கள் இரண்டைப் பெயரிடுக.
- தேசிய இளைஞர் சேவை மன்றம்.
- அரச சார்பற்ற நிறுவனம்.
05. கற்றல்-கற்பித்தல் செயன்முறையை விளைதிறனுடையதாக மேற்கொள்வதற்கு ஆசிரியர்த் தரவட்டங்கள் (Quslity Circle) மீக முக்கியமானவையாகும். அவற்றின் மூலம் ஆசிரியருக்குக் கிடைக்கும் இரண்டு நன்மைகளை எழுதுக.
- தொழில்சார் பயிற்சியை மேம்படுத்தல்
- தொழில்சார் வாண்மைத்துவத்தினை விருத்தி செய்தல்.
- தொழில்சார் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்.
குறிப்பு -
- விடைகளில் பிழைகள் அல்லது சேர்க்கவேண்டியவைகள் இருந்தால் தெரியப்படுத்தவும். sihatth3@gmail.com
- மேலதிக விடைகளைத் தேடி இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்
கல்வித் தத்துவங்களும் கோட்பாடுகளும் | PGDE | வினா விடை - (02)
Reviewed by Admin
on
May 28, 2022
Rating:

Thanks
ReplyDelete